Tuesday 17 July 2012

சோழர் குறுந்தகடு வெளியீடு




சோழர்களின் வாரிசுகளான பித்தர்புரம் எனப்படும் பிச்சாவரம் பாளையக்காரர்கள் பற்றி 2004  ஆம் ஆண்டு கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை கொண்டு இன்றும் வாழும் சோழமன்னர்கள் என்ற ஆவணப்படத்தை தயாரித்தேன். படம் எடுத்து ஏழு ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் 04  -09  - 2011 அன்று வெளியிடப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் சமூக முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற வன்னியர் கல்வி திருவிழாவில் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் வெளியிட, சமூக முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு. கே. கோபால் அவர்கள் பெற்று கொண்டார்.

இதற்கு காரணமாக இருந்த திரு. கே. கோபால் அவர்கள், உடன் வந்திருந்த திரு. நா. முரளி நாயக்கர் அவர்கள், தியாகவல்லி திரு. சேகர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.            
  

விழாமேடையில் நான் 

எனது உரை 

குறுந்தகட்டை திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் வெளியிட திரு. கே. கோபால் அவர்கள் பெற்று கொள்ளுதல். 

இன்றும் வாழும் சோழமன்னர்கள் ஆவணப்படத்தை பார்க்க இங்கு அழுத்தவும்:   

http://annalpakkangal.blogspot.in/2012/05/blog-post_22.html